Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த காணிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் இன்று வனஜீவராசிகள் திணைக்களத்திடம்; ரிஷாட் எம்.பி குற்றச்சாட்டு!

நாம் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த காணிகளில் ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் இன்று வனஜீவராசிகள் திணைக்களத்திடம்; ரிஷாட் எம்.பி குற்றச்சாட்டு!

3 years ago
in செய்திகள்

அதிகாரத்தில் இருக்கும்போது நாம் மக்களுக்கு வழங்கிய ஆயிரக்கணக்கான காணிகள் இன்று வனஜீவராசிகள் மற்றும் வனபரிபாலன திணைக்களங்கள் ஆகியவற்றினால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் முசலி பிரதேசத்தில் தற்போது 15 சதவீதமான காணிகளே மக்களின் பாவனைக்காக எஞ்சியிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார், முசலி YMMA கிளையின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமை (26) முசலி தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மேற்படி தெரிவித்த ரிஷாட் எம்.பி. மேலும் தனது உரையில் கூறியதாவது,

YMMA என்பது ஒரு பலம்வாய்ந்த நிறுவனமாகும். தேசிய ரீதியில் நல்ல பணிகளை செய்து வருகின்றது. சகோதரர் றிஸ்மி அவர்கள் அதன் தலைவராக இருந்த காலம் YMMAவுக்கு பொற்காலமாக அமைந்திருந்தது.

ஆன்மிகம், அரசியல், கல்வி மற்றும் சமூக ரீதியில் YMMA பல பணிகளையும் வேலைத்திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி, வரலாறு படைத்தது என்பதை நன்றியுணர்வுடன் கூற விரும்புகின்றேன். அதேபோன்று, முசலி பிரதேசத்திலும் நல்ல பல வேலைத்திட்டங்களை YMMA முன்னெடுத்திருந்தது.

முசலி பிரதேசத்தில் குறுகிய காலத்துக்குள் நாம் பல பணிகளையும் வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்தமை வெளிப்படையானது. இந்த வைபவத்தில் பங்கேற்றிருக்கும் ஊர் கனவான்களுக்கு இந்த உண்மை தெரியும். அவர்களில் பலர் இதற்கு சாட்சிகளாகவும் உள்ளனர்.

முசலியில் வானளாவிய ரீதியில் உயர்ந்திருக்கும் மாடிக்கட்டடங்கள், பாடசாலைகள், மக்கள் குடியிருக்கும் வீடுகள் மற்றும் இன்னோரன்ன விடயங்கள் வானத்திலிருந்து திடீரென குதித்தவை அல்ல.

பண்டாரவெளி, கொண்டச்சி, பொற்கேணி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட சாஹிரா, அல்ஜாசிம் ஆகிய பாடசாலைகள் மிகவும் குறுகிய காலத்தில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டவையே.

அப்போது இந்த பாடசாலைகளை தடைகள், சவால்கள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் நாங்கள் ஆரம்பித்தபோது மாணவர்கள் மிகவும் குறைவாகவே இருந்தனர்.

முசலி பாடசாலையை தேசிய பாடசாலையாக ஆக்க வேண்டும் என நாங்கள் பகீரத முயற்சிகள் எடுத்தபோது, மாணவர்களின் வரவு குறைவாகவே இருந்தது. எனினும், அமைச்சரவைக்கு விஷேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை சமர்ப்பித்தே அதில் நாம் வெற்றிபெற்றோம். அப்போது தேசிய ரீதியில் மூன்று பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அதில் முசலியும் ஒன்று.

நான் அமைச்சராக இருந்தபோது, முசலி பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை மக்களுக்கு வழங்கியதால், வில்பத்துவை அழிப்பதாக என் மீது போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றம் வரை சென்றது.

வேறு மாவட்டத்தில் மரம் நட வேண்டும் என எனக்கு எதிராக தீர்ப்பும் வந்தது. 1100 மில்லியன் ரூபாய்க்கு மரம் நட்டு, பத்து வருடங்களுக்கு அதை பராமரிக்கும் செலவுடன் மொத்தமாக 116 கோடி ரூபா செலுத்த வேண்டும் என தீர்ப்பு வந்தது.

அந்தத் தீர்ப்புக்கு எதிராக நான் மேன்முறையீடு செய்துள்ளேன். அது குறித்த வழக்கு தொடர்ந்துகொண்டிருக்கிறது.

நான் அமைச்சராக இருந்த காலத்தில், முசலி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கட்டடங்களை பார்க்கும்போது, உண்மையில் எனக்கு மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் இருக்கின்றது. எனக்கு அந்த சக்தியை தந்த இறைவனுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி செலுத்துகின்றேன்.

நாங்கள் இந்தப் பிரதேசத்துக்குள் நுழையும் போது, நான்காம் கட்டையிலிருந்து சிலாவத்துறை வரை எங்குமே காடாகவே இருந்தது.

மொத்தத்தில் முசலி பிரதேசம் முழுவதுமே வனாந்திரமாக காணப்பட்டது. நாங்கள் கால் வைக்கும்போது ‘கண்ணிவெடி அபாயம் இருக்கின்றது; கால்வைக்க வேண்டாம்’ என பொலிஸார் எச்சரித்தனர். ‘பாலைக்குளிக்கு செல்ல வேண்டாம்’ என்றும் அறிவுறுத்தினர். இந்தப் பிரதேசத்தில் அநேகமான இடங்களில் குடியேற்றம் நடந்த பின்னர் இறுதியாகவே கொண்டச்சியில் மக்களை குடியேற்றினோம். கொண்டச்சி கிராமத்தில் உள்ள நிலக்கண்ணிவெடிகளை அகற்ற விஷேட வேலைத்திட்டம் ஒன்றை உருவாக்கி, எமது சொந்த நிதியில் கண்ணிவெடிகளை அகற்றி, மக்களை மீள்குடியேற்றினோம். சர்வதேச நிறுவனங்கள் பல இருந்தபோதும், அவர்கள் கண்ணிவெடிகளை அகற்ற உதவி செய்யவில்லை. காணிகளை அபகரிக்கும் எண்ணமே அவர்களிடம் இருந்தது.

புதிய பாடசாலைகளை உருவாக்கினோம்; ஆசிரிய நியமனங்களை வழங்கினோம்; சதிகளுக்கும் தடைகளுக்கும் பின்னாலேயே இந்தப் பணிகளில் வெற்றிபெற்றோம்.

கடந்த 3, 4 வருடங்களாக நாம் மிகவும் அமைதியாக இருக்கின்றோம். எவராவது இந்தப் பணிகளை தொடர வேண்டும் என்றே விரும்புகின்றோம். எனினும், நாம் வழங்கிய காணிகளில் பல ஏக்கர்கள் இன்று வனஜீவராசிகள் திணைக்களத்தினால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை தட்டிக்கேட்க யாரும் இல்லை. பார்ப்பாரும் கேட்பாரும் அற்ற சமூகமாகவே இந்தப் பிரதேச மக்கள் வாழ்கின்றனர்.

அண்மையில் முல்லைத்தீவிலும் வவுனியாவிலும் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஆனால் முசலிப் பிரதேசத்தில் காணி எதுவும் விடுவிக்கப்படவில்லை. எனினும், ஜனாதிபதி காணிகளை விடுவிக்குமாறு கூறுகின்றார்.

1984ஆம் ஆண்டுக்கு பின்னர், வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தப்பட்ட அனைத்து காணிகளையும் விடுவித்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றுமாறு அவர் கூறுகின்றார்.

அண்மையில் இடம்பெற்ற மன்னார் கூட்டத்தில் முசலிப் பிரதேசத்தில் ஒரு துண்டுக் காணியையேனும் விடுவிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்படவில்லை.

இதை பற்றி நாம் தெரிவித்தபோது, கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் 27ஆம் திகதி இதற்கென ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து, கலந்துரையாட தீர்மானித்தனர். ஆனால், அவ்வாறு முடிவு எடுக்கப்பட்டபோதும் இங்குள்ள உள்ளூர் அதிகாரிகள் அதற்கான ஏற்பாடுகளை செய்யாமல் தலைமறைவாகிவிட்டனர். இதுதான் இன்றைய நிலை.

முசலியில் உள்ள கல்விமான்களும் ஊர் மக்களும் இது தொடர்பில் பேச வேண்டும். இவற்றை தட்டிக்கேட்க வேண்டும். நிலத்துக்காகவே வடக்கு, கிழக்கில் போராட்டங்கள் நடைபெற்றன.

1990ஆம் ஆண்டு நாங்கள் வெளியேற்றப்பட்டபோது, 15 சதவீதக் காணிகளே வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு சொந்தமாக இருந்தது. இன்று நாங்கள் மக்களுக்கு கொடுத்த காணிகளைக் கூட மீண்டும் வர்த்தமானியின் மூலம் கையகப்படுத்தியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் 15 சதவீதமான காணிகளே மக்களுக்கு இருக்கிறது. எஞ்சிய எல்லாவற்றையும் வனஜீவராசிகள் திணைக்களம் அபகரித்து வைத்திருக்கிறது. ஆனால், சிலர் இவற்றை கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

பிரதேச செயலாளர் இந்த அநியாயங்களை தொடர்ந்தும் செய்யாமல், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், நாங்கள் அமைதியான முறையில், ஜனநாயக ரீதியில் போராட்டங்களை முன்னெடுக்கவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாவோம்.

உள்ளூர் அதிகாரிகளின் நிர்வாகக் கெடுபிடிகளால்தான் நமக்கு கஷ்டங்கள் தொடர்கின்றன என்ற உண்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

தொடர்புடையசெய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை
செய்திகள்

மன்னார் படுகையில் இயற்கை எரிவாயு இருப்பு உறுதி; முதலீட்டாளர்களைத் தேர்வு செய்ய நடவடிக்கை

August 13, 2026
காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!
செய்திகள்

காரைதீவில் புதிய மத்திய ஆயுர்வேத மருந்தகக் கட்டிடம் திறந்து வைப்பு!

August 13, 2026
மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்
செய்திகள்

மகிந்தவின் ஆட்சியில் மீளப்பெறப்படாத மற்றுமொரு பாரிய நிதி அறிக்கையில் அம்பலம்

August 13, 2026
வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!
செய்திகள்

வெளிநாடுகளில் தலைமறைவான 93 சந்தேக நபர்களுக்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தல்!

August 13, 2026
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!
செய்திகள்

‘க்ளீன் ஸ்ரீலங்கா’ திட்டத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்!

August 13, 2026
பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!
செய்திகள்

பதவி இழப்பைப் பற்றி கவலையில்லை; மாற்றத்துக்காக எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்!

August 13, 2026
Next Post
நாளை மட்டு நகரில் கண்டன பேரணி; இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு!

நாளை மட்டு நகரில் கண்டன பேரணி; இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.