முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தியதற்காக லேக் ஹவுஸ் நிறுவனம் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்குவதை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், லேக் ஹவுஸ் என்று அழைக்கப்படும் ஏசோசியேடட் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்தில் பிரசுரமாகும் பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைக்கு எதிரான வழக்கில் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

2007 நவம்பரில் சிலுமின பத்திரிகையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜபக்ச அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியில் சேர முடிவு செய்த பின்னர் இந்த கட்டுரை வெளியிடப்பட்டது.
இதன் அடிப்படையில் 2009 ஆம் ஆண்டில் இதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் 500 மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரி அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
2010 ஆம் ஆண்டில், நீதிமன்றம் அவருக்கு தீர்ப்பளித்து முழுத் தொகையையும் வழங்குமாறு உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து லேக் ஹவுஸ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி மேன்முறையீடு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.








