இன்று (22) காலை வடஇலங்கையின் கிழக்காக வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போது தமிழ்நாட்டின் கரையோர பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
இது நாளை (23) காற்றழுத்த தாழ்வு பகுதியாக கர்நாடகா மாநிலத்தை ஊடறுத்து அரபிய கடல் பகுதிக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம் தற்போது இது தமிழ்நாட்டின் கரையை நோக்கி நகர்ந்து சென்றுள்ளதன் காரணத்தினால் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி போன்ற பகுதிகளில் அதிக அளவான மழை பெய்து கொண்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.








