ஜெர்மனியை தலைமையகமாகக் கொண்டு இயங்கிவரும் கிரிவலம் அறக்கட்டளை தனது கிழக்கு மாகாண அலுவலகத்தை மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி நீதிமன்றம் எதிரில் அமைந்துள்ள கட்டிடத்தில் அண்மையில் சிறப்பாக திறந்து வைத்தது.
அறக்கட்டளையின் கிழக்கு மாகாண செயலாளர் பி. கே. லிவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், களுவாஞ்சிக்குடி பிரதேச சபை தவிசாளர் என். வினோராஜ், பட்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் எம். சபேஷ் குமார், சட்டத்தரணி கே. கிருபாகரன், கிராம உத்தியோகத்தர் எம். அனோஜன், முல்லைத்தீவு ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் உப தலைவர் எஸ். எஸ். சீலன், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கபில பண்டார, அறக்கட்டளையின் பொருளாளர் கே. ரி. பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் முக்கிய நிகழ்வாக, கிழக்கு மாகாண அலுவலகம் சம்பிராய பூர்வமாக நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டது. இதையடுத்து, முதியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிப்பு மற்றும் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.


















