மட்டக்களப்பு வாகனேரி கொழும்பு வீதியின் அருகில் உள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றை வாழைச்சேனை பொலிசார் இன்று (26) மாலை மீட்டுள்ளனர்.
அரச புலனாய்வுத் துறைக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிசாரின் கவனத்திற்கு தெரியப்படுத்தியதனையடுத்து குறித்த குண்டு மீட்க்கப்பட்டுள்ளது .
கடந்த காலத்தில் விடுதலை புலிகள் அமைப்பினரால் கைவிடப்பட்டிருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கடந்த வாரம் வடமுனை வயல் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் இதே போன்றதொரு கைகுண்டு கண்டெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.








