இந்தியாவில் நடைபெற்ற 4வது தெற்காசிய மூத்த அட்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப் 2025யில் பாத்திமா சபியா யாமிக் என்ற இலங்கையை சேர்ந்த வீராங்கனை தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் 1999ல் பிறந்தவர் மற்றும் கண்டி விஹார மஹா தேவி பெண்கள் பாடசாலையில் கல்வி பயின்று, தற்போது இலங்கை இராணுவ கழகத்தில் சேவை புரிந்து வருகிறார்.
அவர் தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 100m, 200m மற்றும் 4×100m ரிலே போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்று, புதிய மீட் சாதனைகள் பதிவு செய்துள்ளார்:

100m – 11.53 வினாடிகள்
200m – 23.58 வினாடிகள்
4×100m ரிலே – 44.70 வினாடிகள்
பாத்திமாவின் சாதனை பெண்களுக்கோர் தன்னம்பிக்கையும் திறமையையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








