திருகோணமலை – உட்துறைமுக வீதி கடற்கரையில் பெருமளவான சிவப்பு நிற நண்டுகள் கரை ஒதுங்கி வருவதாக தெரியவருகின்றது.
இதில் பெருமளவான நண்டுகள் இறந்த நிலையிலும், சில நண்டுகள் உயிருடனும் கரை ஒதுங்கி வருகின்றன.
கடந்த மூன்று நாட்களாக இச் சிவப்பு நிற நண்டுகள் கரையொதுங்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு நண்டுகள் கரையொதுங்குவதற்கான காரணம் தெரியாதென மீனவர்களும், பொதுமக்களும் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் பல்வேறு பாகங்களிலும் அண்மைக்காலமாக இவ்வாறு சிவப்பு நிற நண்டுகள் கரைஒதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








