அம்பாறை மாவட்டத்தின் மஹா ஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றிலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மின்னேரியா இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மின்னேரியா பீரங்கி படைப்பிரிவில் கடமையாற்றும் இராணுவ வீரரின் மனைவியுடன் தகாத உறவில் குறித்த சிப்பாய் இருந்த நிலையிலேயே குறித்த மனைவியின் கவனான இராணுவ சிப்பாயினால் குறித்த சிப்பாய் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் குறித்த மனைவியின் கணவன் மஹாஓயா பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.








