Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்று குழந்தைகளின் தாயை 143 முறை குத்தி கொலை செய்த 13 வயது சிறுமி; இங்கிலாந்தில் சம்பவம்

முன்று குழந்தைகளின் தாயை 143 முறை குத்தி கொலை செய்த 13 வயது சிறுமி; இங்கிலாந்தில் சம்பவம்

10 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இங்கிலாந்தில், ஒரு 13 வயது மாணவி, மூன்று குழந்தைகளுக்குத் தாயான ஒரு பெண்ணை 143 முறை கத்தியால் குத்தி கொலை செய்த பின்னர், தடயங்களை மறைக்க அவரது வீட்டில் தீ வைத்துவிட்டுச் சென்ற சம்பவம் குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

மார்ச் மாதம் நார்தாம்டன்ஷையரில் உள்ள வெல்லிங்பரோவில் உள்ள ஒரு வீட்டில் 43 வயதான மார்டா பெட்னார்க்ஸிக் என்பவரின் உடல் தீக்காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையின்படி, மார்டா உடலில் குறைந்தது 143 கூர்மையான காயங்கள் இருந்தது தெரியவந்தது.

இதில் 65 காயங்கள் அவரது தலை மற்றும் கழுத்துப் பகுதியில் இருந்துள்ளன. இது ஒன்றுக்கும் மேற்பட்ட கத்திகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரு கத்தி காயம் அவரது மூளைக்குள் சென்றிருந்தது, மேலும் இரண்டு காயங்கள் நுரையீரலைப் பாதித்திருந்தன.

மண்டை ஓட்டைத் துளைக்கும் அளவுக்குக் குத்துவதற்கு கடுமையான விசை தேவைப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த 13 வயதுச் சிறுமி, மார்டாவை சட்டவிரோதமாகக் கொன்றதை ஒப்புக்கொள்கிறார்.

ஆனால், ‘குறைக்கப்பட்ட பொறுப்பு’ (diminished responsibility) என்ற காரணத்தைக் கூறி, கொலை (Murder) குற்றத்தை மறுக்கிறார். சிறுமியின் குறைக்கப்பட்ட பொறுப்பு என்ற வாதத்தை அரசுத் தரப்பு ஏற்க மறுக்கிறது.

இது திட்டமிட்டக் கொலை என்றும், சிறுமி தீவிரமான தீங்கு விளைவிக்கவே இந்தக் கொலையைச் செய்துள்ளார் என்றும் வழக்குரைஞர் ஸ்கின்னர் வாதிட்டார். சிறுமி இந்தக் கொலை தொடர்பாகப் பொய் கூறியுள்ளார் என்றும், கொலைக்கு முன் அவர் இணையத்தில் மேற்கொண்ட தேடல்களும் (research) இந்தச் செயலைத் திட்டமிட்டுக் செய்ததைக் காட்டுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தக் கொலையானது அவரது மனநலக்குறைவால் ஏற்பட்டதல்ல, இது திட்டமிட்ட கொலை என்று அரசுத் தரப்பு உறுதியாகக் கூறியது.

மனநல மருத்துவத் துறையில் உள்ள நிபுணர்கள், அவரது செயல்கள் மோசமான மனநலத்தால் ஏற்பட்டவை அல்ல என்று கூறியுள்ளதையும் வழக்குரைஞர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சிறுமியின் கொலைக்கான நோக்கமும், குறைக்கப்பட்ட பொறுப்பு என்ற பாதுகாப்பு வாதமும் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்
அரசியல்

மட்டக்களப்பில் சிவஞ்ஞானம், சுமந்திரன் உட்பட்ட 4 பேருக்கு எதிராக அரியநேந்திரன் வழக்குத்தாக்கல்

September 16, 2026
சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!
உலக செய்திகள்

சர்வதேச கடற்பரப்பில் இந்திய-பாகிஸ்தான் கடற்படை கப்பல்கள் மோதல்!

September 16, 2026
அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை; வெள்ளம், மண்சரிவு குறித்து எச்சரிக்கை!

September 16, 2026
சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது
செய்திகள்

சிறுவர் குற்ற வழங்குகள் உள்ளவர்களுக்கு அரச வேலை கிடையாது

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு தப்பிச் சென்றதாக வெளியான செய்திகளுக்கு குடும்பத்தினர் மறுப்பு

September 16, 2026
தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது
செய்திகள்

தென் கொரியாவிற்கு வேலைக்கு சென்று போதைப்பொருள் விற்ற இலங்கையர் கைது

September 16, 2026
Next Post
திருகோணமலை – மூதூர் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி மீட்பு

திருகோணமலை - மூதூர் பகுதியில் புதைக்கப்பட்ட மிதிவெடி மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.