இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக தமிழரசுக் கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) திகதி புதன்கிழமை வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வருடம் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியின் உப விதிகளுக்கு எதிராக நீக்கியமைக்கு எதிராக தற்போதைய கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னால் பொது செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் தமிழரசுக் கட்சிக்கும் எதிராக சிரேஸ்ட சட்டத்தரணி பிறேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கினை மாவட்ட நீதவான் இன்று எடுத்துக் கொண்ட போது எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு அடுத்த வழக்கினை நீதவான் திகதியிட்டுள்ளார்.








