Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிரான புலி ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்

லண்டனில் ரில்வின் சில்வாவிற்கு எதிரான புலி ஆதரவாளர்களின் போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி கண்டனம்

8 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

புலம்பெயர் தமிழ் மக்களில் ஒரு பிரிவினர் கோமா நிலையில் இருந்து மீண்டு யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. லண்டனில் ஜே.வி.பி. தலைவர்களுள் ஒருவரான ரின்வின் சில்வாவாற்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட வன்முறை ஆர்ப்பாட்டத்திற்கு தமது கண்டனத்தினையும் வெளிப்படுத்தி இருக்கின்றது.

யாழ். ஊடக மையத்தில் இன்று (24) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்துகொண்ட ஈ.பி.டி.பி. கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்தினால் குறித்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும், விமர்சனங்களுக்கு அப்பால் கடந்த ஆயுத வழிமுறையில் ஈடுபட்டு பின்னர் ஜனநாயக நீரோட்டத்தில் இணைந்த தரப்பு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி இருக்கின்றது.

குறித்த தரப்பு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றது. புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட போதிலும் அந்த அமைப்பு சார்பாக உயிரழந்தவர்களை அவர்களின் உறவுகள் நினைவுகூற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் என்கிறார்கள். அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பாக பரிசீலிப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். இவ்வாறான சூழலில் ரில்வின் சில்வாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதை அறிவுசார்ந்து சிந்திக்கின்ற யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தற்போதைய சூழலில் இவ்வாறான செற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் கோமா நிலையில் இருக்கின்றார்களோ என்ற சந்தேகத்தினை ஏற்படுத்துகின்றது. ஒரு காலத்தில் இந்த நாட்டிலே தமிழ் மக்கள் சார்பிலே ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 87 ஆம் ஆண்டு இலங்கை – இந்திய போராட்டத்தின் பின்னர் ஈ.பி.டி.பி. மாற்று கருத்துக்களை வெளிப்படுத்தி வந்திருந்தது.

இருந்தாலும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் இலக்கை அடைய முடியும் என்று ஒரு தரப்பு செயல்பட்டு வந்தது. அதனை வலுப்படுத்தும் வகையில் புலம்பெயர் நாடுகளில் தென்னிலங்கை ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இன்று அந்த நிலை இல்லை என்பதையும், இப்போது முன்னெடுக்கப்படும் இவ்வாறான செயற்பாடுகள் தாயகத்தில் வாழும் எமது மக்களின் இருப்பிற்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

தாய்லாந்தில் கடத்தப்பட்ட 3 இந்திய சுற்றுலாப் பயணிகள் மீட்பு; சித்திரவதை பின்னணியில் அதிர்ச்சி தகவல்கள்!

July 30, 2026
கொழும்பை வந்தடைந்த மேலும் 106 புதிய மெட்ரோ பேருந்துகள்; பயணிகளுக்கு விரைவில் நவீன சேவை!
செய்திகள்

கொழும்பை வந்தடைந்த மேலும் 106 புதிய மெட்ரோ பேருந்துகள்; பயணிகளுக்கு விரைவில் நவீன சேவை!

July 30, 2026
ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!
செய்திகள்

ஈரான் மீது அமெரிக்கா புதிய தாக்குதல்கள்; மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் தீவிரம்!

July 30, 2026
உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்; ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு!

July 30, 2026
விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை
செய்திகள்

விபத்து பகுதிகளுக்கு அம்புலன்ஸ் செல்லும்முன் செல்லப்போகும் மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

July 30, 2026
தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை
உலக செய்திகள்

தேசத்துரோகக் குற்றச்சாட்டு; ரஷ்ய பெண் பத்திரிகையாளருக்கு 12 ஆண்டுகள் சிறை

July 30, 2026
Next Post
பாடசாலை வாகனங்களுக்குள் சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை

பாடசாலை வாகனங்களுக்குள் சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை கட்டாயமாக்க நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.