மாவீரர் வாரத்தினை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோருக்கு மதிப்பளிக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன.
மட்டக்களப்பு வாகரையில் நேற்று (24) மாலை மாவீரர் மதிப்பளிக்கும் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றதுடன், வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இலத்திற்கு முன்பாகவுள்ள மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இலக்கியா தென்றல் அமைப்பின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சி.நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவீரர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாவீரர்களின் பெற்றோர் குடும்ப உறுப்பினர்கள் மேளதாளங்களுடன் அழைத்துவரப்பட்டதை தொடர்ந்து மாவீரர்கள் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் பெருமளவான மாவீரர் குடும்பங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

















