அதன்படி 2025.11.29 முற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட வெள்ள எச்சரிக்கை மேலும் 48 மணிநேரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய எச்சரிக்கை நாளை மறுநாள் (03) பிற்பகல் 2 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள நிலைமைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படக்கூடியதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








