Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டுப் போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை நிபுணரை இல்லாமல் செய்வதற்கான சதி மேற்கொள்ளப்படுகிறதா?

மட்டுப் போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை நிபுணரை இல்லாமல் செய்வதற்கான சதி மேற்கொள்ளப்படுகிறதா?

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கிழக்கு மாகாணத்தின் முதன்மை வைத்தியசாலையான மட்டு போதனா வைத்தியசாலையில், 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டாவது பொது அறுவை சிகிச்சை ‘எண்ட் போஸ்ட்’ என்ற பதவி தற்போது காலியாக உள்ளது.

அறுவை மற்றும் சிகிச்சை நிபுணர் டாக்டர் T. R. நிமலரஞ்சன் அவர்கள் 2025 செப்டம்பரில் காலமானதை தொடர்ந்து இந்த பதவி காலியாகியுள்ளது. ஆனால் தற்போது இந்த பதவி வெற்றிடத்தை 2026 ஆண்டுக்கு ஆன அண்மையில் வெளியான வெற்றிட பட்டியலில் இந்த பதவி வெற்றிடம் தொடர்பான விபரம் பிரசுரிக்கப்படாதுள்ளமை இந்த பதவியை நிரந்தரமாக மட்டு போதனா வைத்தியசாலையிலிருந்து மூடுவதற்கான ஒரு முயற்ச்சியே என சந்தேகிக்க தோன்றுகிறது.

ஒரு சத்திரை சிகிச்சை நிபுணரை இழந்த மட்டு மண்ணுக்கு இன்னொரு நிபுணரை பதிலீடாக வழங்குவது
தான் யதார்த்தம் அன்றி அந்த பிரிவையே வைத்தியசாலையிலிருந்து மூடுவது அல்ல.

இந்த விடயத்தில் சுகாதார அமைச்சும், இடமாற்ற திணைக்களமும் சாதகமான நிலையில் உள்ள போதும் மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கால் இன்று நல்ல நிலையில் இயங்கி கொண்டுண்டிருக்கும் நோயாளர் விடுதி 11, 12 முக்கிய சத்திர சிகிச்சை நிபுணரை இழக்கும் அபாயத்தில்உள்ளது .

கிடைக்கக்கூடிய அறிக்கைகள் படி, இந்த இரண்டாவது எண்ட் போஸ்ட் அதாவது குறித்த பதவிநிலையானது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் “தற்காலிகமாக ஒத்திவைப்பு” (Temporary Withhold) என குறிக்கப்பட்டுள்ளது. எனினும், இடமாற்ற திணைக்களத்திலிருந்து இதுவரை எந்த பொதுவான உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.

கட்டமைப்பு குறைபாடுகள் ( infra structure ) மற்றும் ஆளணி பற்றாக்குறையே தாமதத்திற்கு காரணம் என சில வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டாலும் , 11 மற்றும் 12ஆம் நோயாளர் விடுதிகள் தற்போது பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கி கொண்டிருப்பதும், போதுமான ஆளணிகளுடன் இயங்கிய ஒரு முற்றுப்பெற்ற நோயாளர் விடுதி என்பதால் புதிதாக ஒரு வசதியும் உடனடியாக தேவை படாது என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியுள்ளது.

மருத்துவ சங்கங்களும், தொழில்முறை குழுக்களும் இந்தப் பதவியுடன் தொடர்புடைய ஆவணங்களில் நடைமுறை வேறுபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி, நிர்வாக செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.

இரண்டரை மில்லியன் மக்களுக்கு சேவை வழங்கும் இந்த மருத்துவமனைக்கான முக்கியமான அறுவைச் சிகிச்சை பதவி நீண்டகாலம் காலியாக இருப்பது, குறிப்பாக புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவசரநிலை சிகிச்சைகள் நேர்மையாக கிடைப்பதை பாதிக்கக்கூடும்.

சுகாதார அமைச்சும், பொது சேவை ஆணையமும், இந்தப் பதவியின் நிர்வாக நிலையைத் தெளிவுபடுத்தவும், அத்தியாவசிய அறுவைச் சிகிச்சை சேவைகளின் தொடர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் விரைவாக இந்தப் பதவியை நிரப்புவதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு விளம்பர அறிவித்தலை வெளியிடவேண்டும் என பொதுமக்களும் , சமூக அக்கறை கொண்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்
செய்திகள்

கதிர்காம பாத யாத்திரீகர்களை கண்காணிக்கும் புலனாய்வு பிரிவினர்

June 14, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்றத்திற்கு வந்து கூறுங்கள்; நளிந்த ஜயதிஸ்ஸ

June 14, 2026
கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை
செய்திகள்

கொழும்பில் 5,000 பரதநாட்டிய கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட கின்னஸ் உலக சாதனை

June 14, 2026
அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்
அரசியல்

அ.தி.மு.கவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நடிகை கௌதமி விலகல்

June 14, 2026
சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்
செய்திகள்

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படலாம்

June 14, 2026
பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி
செய்திகள்

பிரபாகரனின் மகன் குறித்து பேசும் ஹக்கீம், 1990 ஜூன் 11-ஐ மறந்துவிட்டாரா? – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கலீலுர் ரஹ்மான் கேள்வி

June 14, 2026
Next Post
டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

டித்வா புயலால் மூன்று இலட்சம் சிறுவர்கள் பாதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.