கிழக்கு மாகாணத்தின் முதன்மை வைத்தியசாலையான மட்டு போதனா வைத்தியசாலையில், 2015ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இரண்டாவது பொது அறுவை சிகிச்சை ‘எண்ட் போஸ்ட்’ என்ற பதவி தற்போது காலியாக உள்ளது.
அறுவை மற்றும் சிகிச்சை நிபுணர் டாக்டர் T. R. நிமலரஞ்சன் அவர்கள் 2025 செப்டம்பரில் காலமானதை தொடர்ந்து இந்த பதவி காலியாகியுள்ளது. ஆனால் தற்போது இந்த பதவி வெற்றிடத்தை 2026 ஆண்டுக்கு ஆன அண்மையில் வெளியான வெற்றிட பட்டியலில் இந்த பதவி வெற்றிடம் தொடர்பான விபரம் பிரசுரிக்கப்படாதுள்ளமை இந்த பதவியை நிரந்தரமாக மட்டு போதனா வைத்தியசாலையிலிருந்து மூடுவதற்கான ஒரு முயற்ச்சியே என சந்தேகிக்க தோன்றுகிறது.
ஒரு சத்திரை சிகிச்சை நிபுணரை இழந்த மட்டு மண்ணுக்கு இன்னொரு நிபுணரை பதிலீடாக வழங்குவது
தான் யதார்த்தம் அன்றி அந்த பிரிவையே வைத்தியசாலையிலிருந்து மூடுவது அல்ல.

இந்த விடயத்தில் சுகாதார அமைச்சும், இடமாற்ற திணைக்களமும் சாதகமான நிலையில் உள்ள போதும் மட்டு போதனா வைத்தியசாலை நிர்வாகத்தின் அசமந்த போக்கால் இன்று நல்ல நிலையில் இயங்கி கொண்டுண்டிருக்கும் நோயாளர் விடுதி 11, 12 முக்கிய சத்திர சிகிச்சை நிபுணரை இழக்கும் அபாயத்தில்உள்ளது .
கிடைக்கக்கூடிய அறிக்கைகள் படி, இந்த இரண்டாவது எண்ட் போஸ்ட் அதாவது குறித்த பதவிநிலையானது அதிகாரப்பூர்வ ஆவணங்களில் “தற்காலிகமாக ஒத்திவைப்பு” (Temporary Withhold) என குறிக்கப்பட்டுள்ளது. எனினும், இடமாற்ற திணைக்களத்திலிருந்து இதுவரை எந்த பொதுவான உறுதிப்படுத்தலும் வெளியாகவில்லை.
கட்டமைப்பு குறைபாடுகள் ( infra structure ) மற்றும் ஆளணி பற்றாக்குறையே தாமதத்திற்கு காரணம் என சில வைத்தியசாலை அதிகாரிகள் குறிப்பிட்டாலும் , 11 மற்றும் 12ஆம் நோயாளர் விடுதிகள் தற்போது பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கி கொண்டிருப்பதும், போதுமான ஆளணிகளுடன் இயங்கிய ஒரு முற்றுப்பெற்ற நோயாளர் விடுதி என்பதால் புதிதாக ஒரு வசதியும் உடனடியாக தேவை படாது என்பதும் இங்கே சுட்டிக்காட்டப்படவேண்டியுள்ளது.

மருத்துவ சங்கங்களும், தொழில்முறை குழுக்களும் இந்தப் பதவியுடன் தொடர்புடைய ஆவணங்களில் நடைமுறை வேறுபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி, நிர்வாக செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளன.
இரண்டரை மில்லியன் மக்களுக்கு சேவை வழங்கும் இந்த மருத்துவமனைக்கான முக்கியமான அறுவைச் சிகிச்சை பதவி நீண்டகாலம் காலியாக இருப்பது, குறிப்பாக புற்றுநோய் நோயாளிகள் மற்றும் அவசரநிலை சிகிச்சைகள் நேர்மையாக கிடைப்பதை பாதிக்கக்கூடும்.
சுகாதார அமைச்சும், பொது சேவை ஆணையமும், இந்தப் பதவியின் நிர்வாக நிலையைத் தெளிவுபடுத்தவும், அத்தியாவசிய அறுவைச் சிகிச்சை சேவைகளின் தொடர்ச்சியை உறுதிசெய்யும் வகையில் விரைவாக இந்தப் பதவியை நிரப்புவதற்கு உத்தியோகபூர்வமாக ஒரு விளம்பர அறிவித்தலை வெளியிடவேண்டும் என பொதுமக்களும் , சமூக அக்கறை கொண்டவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.








