பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் வழிகாட்டலில் நேற்று (13) இரவு நேர பஸ்தரிப்பு உணவகங்கள் சுகாதார வைத்திய அதிகாரி, மாவட்ட மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர்கள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து விசேட இரவுநேர உணவக பரிசோதனை நாவலடி, ஓட்டமாவடி பகுதியில் இடம்பெற்றது.
இதன்போது மனித நலத்திற்கு தீங்காக உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்த ஒரு உணவகத்திற்கு உடனடியாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் செய்தனர்.
இதன்போது வாழைச்சேனை நீதிவான் உரிய உணகத்தினை உடனடியாக அன்றைய தினத்தில் இருந்து 14 நாட்கள் மூட கட்டளையிட்டதுடன் உரிய உணவக உரிமையாளரிற்கு கடும் எச்சரிக்கை நீதிமன்றால் வழங்கப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் தினங்களில் பரிசோதனை செய்யப்பட்ட ஏனைய உணவகஙகளிற்கு வழக்கு தாக்கல் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

















