இளைஞன் ஒருவன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட கங்க இஹல கோரளை பிரதேச சபையின் தலைவர் இந்திக்க உபுல் குணசேகரவை பிணையில் விடுதலை செய்யுமாறு கம்பளை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
இந்திக்க உபுல் குணசேகர கடந்த 28 ஆம் திகதி தன்னை தாக்கி காயப்படுத்தியதாக கூறி கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இளைஞன் ஒருவன் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் இந்திக்க உபுல் குணசேகர கம்பளை பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்டிருந்தார்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
அம்பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்ட இந்திக்க உபுல் குணசேகர கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து 3 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.








