Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

ஏறாவூர் பற்று பிரதேச சபை ஊழியர்களுக்கான சிங்கள மொழிப் பயிற்சி நிறைவு: சான்றிதழ் வழங்கி கௌரவிப்பு

5 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அரசு கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் 100 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் 52 சுகாதார ஊழியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

அரசு கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் M.M. செய்யினுத்தீன் அவர்களின் வழிகாட்டலில் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிழ்வில் அதிதிகள் கௌரவமாக வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.

பயிற்சியாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிங்கள மொழிப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.

தொடர்ந்து அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.

நிகழ்வின் முக்கிய அங்கமாக, பாடநெறியை முடித்த ஊழியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அதிதிகளாக, ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் M. முரளிதரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் T. குருபராஜா ,
கந்தசாமி – நிர்வாக உத்தியோகத்தர், ஏ. பற்று பிரதேச சபை பிரியதர்ஷினி, நிதி உதவியாளர், ஏ. பற்று பிரதேச சபை. S. சிவதர்சன் ; மட்டக்களப்பு மாவட்ட மொழி அபிவிருத்தி உத்தியோகத்தர் V. சந்திரகுமார்
அரசகரும மொழிகள் திணைக்க மொழிப் போதனாசிரியர், AKM. நிம்ஸான் மற்றும் MI. இம்தியாஸ்
ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

அரச அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த மொழிப் பயிற்சியின் மூலம் ஊழியர்கள் பொதுமக்களுடன் சிறந்த முறையில் தொடர்புகொண்டு, வினைத்திறனான சேவையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
பாரதிராஜா உயிரிழந்ததாக போலி செய்தி; மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பு

பாரதிராஜா உயிரிழந்ததாக போலி செய்தி; மருத்துவமனை நிர்வாகத்தின் அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.