அரசு கரும மொழிகள் திணைக்களத்தினால் அரச உத்தியோகத்தர்களுக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் 100 மணித்தியால சிங்கள மொழிப் பாடநெறியினை வெற்றிகரமாக நிறைவு செய்த ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் 52 சுகாதார ஊழியர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அரசு கரும மொழிகள் திணைக்களத்தின் சிரேஷ்ட போதனாசிரியர் M.M. செய்யினுத்தீன் அவர்களின் வழிகாட்டலில் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிழ்வில் அதிதிகள் கௌரவமாக வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் விழா ஆரம்பமானது.
பயிற்சியாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் சிங்கள மொழிப் பாடல்கள் மற்றும் நாடகங்கள் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன.














தொடர்ந்து அதிதிகளின் உரைகளும் இடம்பெற்றன.
நிகழ்வின் முக்கிய அங்கமாக, பாடநெறியை முடித்த ஊழியர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு, கலந்து கொண்ட அதிதிகளுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் அதிதிகளாக, ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் M. முரளிதரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை செயலாளர் T. குருபராஜா ,
கந்தசாமி – நிர்வாக உத்தியோகத்தர், ஏ. பற்று பிரதேச சபை பிரியதர்ஷினி, நிதி உதவியாளர், ஏ. பற்று பிரதேச சபை. S. சிவதர்சன் ; மட்டக்களப்பு மாவட்ட மொழி அபிவிருத்தி உத்தியோகத்தர் V. சந்திரகுமார்
அரசகரும மொழிகள் திணைக்க மொழிப் போதனாசிரியர், AKM. நிம்ஸான் மற்றும் MI. இம்தியாஸ்
ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அரச அலுவலகங்களுக்கு வரும் மக்களுக்கு அவர்களின் தாய்மொழியிலேயே சேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும். இந்த மொழிப் பயிற்சியின் மூலம் ஊழியர்கள் பொதுமக்களுடன் சிறந்த முறையில் தொடர்புகொண்டு, வினைத்திறனான சேவையை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.








