கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குப்பைமேடு பகுதியில் மான்களை சட்டவிரோதமாக பொறி வைத்து வேட்டையாடிய இருவரை ஞாயிற்றுக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் – சூரியபுர பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியபுர பொலிசாருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது வேட்டையாடப்பட்ட நிலையில் இருந்த இரண்டு மான்களுடன் சந்தேக நபர்கள் பிடிபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கந்தளாய் சூரியபுர பகுதியைச் சேர்ந்தவர்களட ஆவர்.
இதன்போது கொண்டு செல்ல தயாராக வைத்திருந்த இறந்த இரு மான்களும், வேட்டைக்கு பயன்படுத்தப்பட்ட பொறியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் திங்கட்கிழமை (05) கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சூரியபுர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








