வெனிசியூலாவின் இடைக்கால அரசு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமெனில் சீனா , ரஷ்யா , கியூபா ஆகிய நாடுகளுடனான பொருளாதார உறவை முறிக்க வேண்டும்’ என , அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிபந்தனை விதித்துள்ளார்
வெனிசுலாவில் முப்பதாயிரம் கோடி பீப்பாய் அளவுக்கு மசகு எண்ணெய் இருப்பு உள்ளது . இவை கனரக மசகு எண்ணெய் . அமெரிக்காவின் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் இவற்றை சுத்திகரிப்பதற்கு ஏற்ற தொழில்நுட்பம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
வெனிசியூலாவில் அதிக அளவு மசகு எண்ணெய் இருப்பு இருந்தாலும் , அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் நவீனமடையாத சுத்திகரிப்பு நிலையங்களால் , நாளொன்றுக்கு பத்து இலட்சம் பீப்பாய்கள் மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது . இதை அதிகரிக்க அமெரிக்கா உதவும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் பல நிபந்தனைகளை அமெரிக்க அரசு விதித்துள்ளது . அதன்படி சீனா , ரஷ்யா , ஈரான் , கியூபாவை வெனிசியூலாவின் எண்ணெய் தொழில்களில் இருந்து வெளியேற்றி , அவற்றுடனான அனைத்து பொருளாதார உறவுகளையும் துண்டிக்க வேண்டும்.
மசகு எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்காவுடன் மட்டுமே கூட்டு சேர வேண்டும் . அமெரிக்க நிறுவனங்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்.
வெனிசியூலா பொருளாதார தடையால் விற்பனை செய்ய முடியாமல் வைத்திருக்கும் மூன்று முதல் ஐந்து கோடி பீப்பாய் அளவிலான மசகு எண்ணெய் , நேரடியாக அமெரிக்க துறைமுகங்களுக்கு வரும் . இதன் கட்டுப்பாடு ட்ரம்பிடம் இருக்கும் . அதன் மூலம் கிடைக்கும் வருமானம் வெனிசியூலா மற்றும் அமெரிக்காவின் நலன்களுக்கு பயன்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.








