எல்லேயில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தளமான லிட்டில் ஆடம்ஸ் சிகரம் பகுதியில், செங்குத்தான பாறையிலிருந்து விழுந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் குழந்தை இன்று பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பத்தின் போது , குழந்தை செல்ஃபி எடுக்க முயன்றபோது குழந்தை கிட்டத்தட்ட 100 அடி உயரத்தில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவத்தைத் தொடர்ந்து, “பறக்கும் ராவணன் சாகச பூங்கா மீட்பு குழு” சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சவாலான நிலப்பரப்பின் மத்தியில் குழந்தையை வெற்றிகரமாக பாதுகாப்பாக மீட்டனர்.
மீட்புக்குப் பிறகு, குழந்தையின் தாய் மிகுந்த உணர்ச்சியுடன் மகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதற்காக நிம்மதி அடைந்தார்.
உயரமான சுற்றுலா தலங்களில், குறிப்பாக பாறை ஓரங்களுக்கு அருகில் புகைப்படம் எடுக்கும்போது அல்லது செல்ஃபி எடுக்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் பார்வையாளர்களை வலியுறுத்தியுள்ளனர்.








