Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யாழில் பேருந்துகள் ஒழுங்குபடுத்தி மக்களை வலுக்கட்டாயமாக கூட்டம் சேர்த்ததாக நிசாந்தன் குற்றச்சாட்டு

யாழில் பேருந்துகள் ஒழுங்குபடுத்தி மக்களை வலுக்கட்டாயமாக கூட்டம் சேர்த்ததாக நிசாந்தன் குற்றச்சாட்டு

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வந்தால் மக்கள் கூட்டம் கூடுகின்றது என்ற மாயை காணப்படுகிறது. உண்மை அதுவல்ல. யாழ்ப்பாணத்தில் உள்ள அரச பேருந்துகள் ஒழுங்கு செய்யப்பட்டு, வலுக்கட்டாயமாகவே மக்கள் அங்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இதனால் மக்கள் பலமணி நேரம் பேருந்தை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் தேசிய கட்சியின் அமைப்பாளரும், யாழ். மாநகர சபையின் உறுப்பினருமாகிய சு.நிசாந்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் அவர் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அந்த பேருந்தில் இருந்தவாறு புகைப்படம் எடுத்து முகநூலில் பகிர்ந்துள்ளார். கிராம சேவகர் கூட இன்றைய நிகழ்வுக்கு மக்களை திரட்டி ஏற்றிச்சென்றார் என்றும் தகவல் வந்துள்ளது.

அதைவிட பிரதேச செயலகங்களில் கடமை புரிகின்ற உத்தியோகத்தர்களும் அழுத்தத்தின் மத்தியில் ஜனாதிபதியின் நிகழ்வில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இதனால் சேவைகளை பெறுவதற்கு சென்ற மக்கள் இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்தபோது என்ன செய்தார்களோ அதைத்தான் இந்த அரங்கமும் செய்கிறது.

இந்த அரசாங்கமானது தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக இன்றைய நிகழ்வில் செயற்பட்டிருக்கிறது.

இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். இவ்வாறான செயற்பாடுகளை இந்த அரசாங்கம் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு என்ன நிலை ஏற்பட்டதோ அதே நிலை அநுரகுமார திசாநாயக்கவுக்கும் ஒரு வருடத்திற்குள் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இங்கு எந்தவிதமான மாற்றங்களும் இடம்பெறவில்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் தமது நிகழ்ச்சி நிரலை தெளிவாக வடக்கு கிழக்கில் முன்னெடுக்கிறது.

நீங்கள் சிங்கள மக்களை ஏமாற்றலாம், ஆனால் தமிழ் மக்களை ஏமாற்ற முடியாது. ஏனெனில் தமிழ் மக்கள் நீண்ட ஒரு போராட்டத்தை கடந்து வந்துள்ளார்கள். எனவே இன்றையதினம் அரச உத்தியோகத்தர்களையும், அரச வாகனங்களையும் பயன்படுத்தியது சட்டவிரோதமான செயல் என்பதை நான் தெட்டத்தெளிவாக தெரிவிக்கின்றேன் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

எல் நினோ தாக்கம் ஆரம்பம்; உலகளாவிய காலநிலை மாற்றம் குறித்து எச்சரிக்கை!

June 5, 2026
நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!
செய்திகள்

நெல் விவசாயிகளுக்கான உர மானியம் ரூ.5,000 அதிகரிப்பு!

June 5, 2026
2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!
செய்திகள்

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது!

June 5, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்துகிறது!

June 5, 2026
போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

போதைப்பொருள் பணத்தில் வாங்கியதாக சந்தேகிக்கப்படும் சொத்துக்கள் முடக்கம்!

June 5, 2026
பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!
செய்திகள்

பிரிட்டனை உலுக்கிய சிறுவர் பாலியல் சுரண்டல் விவகாரம் மீண்டும் கவனத்திற்கு!

June 5, 2026
Next Post
பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

பத்து மாவீரர்களின் 33ஆம் ஆண்டு நினைவேந்தல்; ரவிகரன் எம்.பி பங்கேற்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.