கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட A-9 பிரதான வீதியில், அரச பேருந்துடன் மணல் ஏற்றிய டிப்பர் வாகனமும் விபத்துக்குள்ளானதில் 04 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் சாரதியின் நித்திரை கலக்கம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்தவர்களை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








