Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நாட்டிற்கு ஏற்படும் நட்டம்!

புகையிலை, மதுபானப் பயன்பாட்டால் நாட்டிற்கு ஏற்படும் நட்டம்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

புகையிலை மற்றும் மதுபானப் பயன்பாடு காரணமாக இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 22,000 பேர் உயிரிழப்பதுடன், இதன் விளைவாக நாட்டிற்கு வருடத்திற்கு 225 பில்லியன் முதல் 240 பில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்படுவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபை குறித்து, சுகாதார, ஊடக மற்றும் மகளிர் வலுவூட்டல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இடம்பெற்ற நிறுவன ரீதியான மீளாய்வின் போதே அதிகாரிகள் இந்தத் தகவல்களை வெளிப்படுத்தினர்.

இந்த நிலைமையிலிருந்து மீள்வதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை உள்ளடக்கி, புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத்தைத் திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் நிஹால் அபேசிங்க தலைமையில் குறித்த குழு கடந்த 21ஆம் திகதி பாராளுமன்றில் கூடியது. இதன்போது முதலாவதாக புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட்டன.

உலகில் 104 நாடுகள் தனித்தனி சிகரெட்டுகளை விற்பனை செய்யத் தடை விதித்துள்ளதாகவும், அந்தச் சட்டத்தை இலங்கையிலும் நடைமுறைப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் அதிகார சபை இதன்போது வலியுறுத்தியது.

தனித்தனியாக சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படும் போது, அதன் பொதிகளில் உள்ள எச்சரிக்கை விளம்பரங்கள் நுகர்வோருக்குத் தெரிவதில்லை என்பதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், சிகரெட்டுகளுக்கான வரி விதிப்பானது, விலையைத் தீர்மானித்த பின்னரே மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் இதன்போது வலியுறுத்தினர்.

இங்கு கருத்துத் தெரிவித்த குழுவின் தலைவர், புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான தேசிய அதிகார சபையின் சட்டத் திருத்தங்கள் மற்றும் ஏனைய வேலைத்திட்டங்களுக்குத் தேவையான முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!
செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலய வண்ணக்கராக தியாகராஜா விக்ரமன் தெரிவு!

June 6, 2026
ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!
செய்திகள்

ஆரையம்பதியில் 600 கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது!

June 6, 2026
ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!
உலக செய்திகள்

ரஷ்யா மீது உக்ரைனின் பாரிய ட்ரோன் தாக்குதல்!

June 6, 2026
உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்
செய்திகள்

உயர் கல்வி தேசிய கொள்கைக்கு பொதுமக்களின் கருத்துகள் கோரல்

June 6, 2026
மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!
செய்திகள்

மீகொடை தன்சல் விபத்து; சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!

June 6, 2026
சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சங்கீத்சன் விடுதலையை கோரி கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!

June 6, 2026
Next Post
ஈரானுக்கு ஆதரவு; அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக சவூதி அரேபியா உறுதியான நிலை

ஈரானுக்கு ஆதரவு; அமெரிக்க தாக்குதலுக்கு எதிராக சவூதி அரேபியா உறுதியான நிலை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.