Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஹ்ரானின் சகோதரனை சிறையில் சந்தித்தேன்; பிள்ளையான் தெரிவிப்பு!

சஹ்ரானின் சகோதரனை சிறையில் சந்தித்தேன்; பிள்ளையான் தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

சிறையில் இருக்கும் போது, நான் சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை சந்தித்ததாக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.

வானொலி ஒன்றில் இன்று ஒலிபரப்பான அரசியல் நேர்காணல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி நாட்டை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் நான்கு வருடங்களுக்கு பின்னர், பிரித்தானிய ஊடகமான சனல் 4 பல விடயங்களை வெளிக்கொண்டு வந்திருந்தது.

சனல் 4இனால் வெளியிடப்பட்ட இந்த ஆவணப்படம், இலங்கை அரசியல் பரப்பில் பாரிய சர்ச்சைகளைத் தோற்றுவித்துள்ளது.

குறித்த ஆவணப்படத்தில், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் உதவியாளர் என கூறப்படும் அசாத் மௌலானா, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள், அதனை நடத்துவதற்கு செய்யப்பட்ட சதித்திட்டங்கள் மற்றும் நாட்டில் நடந்த பல கொலை சம்பவங்கள் குறித்து விபரித்திருந்தார்.

இந்த காணொளியில் இராஜாங்க அமைச்சரான சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பெயர் பெரிதும் பேசப்பட்டது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சிவநேசத்துரை சந்திரகாந்தன், தான் சிறையில் இருந்த நேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என கூறப்படும் சஹ்ரான் ஹாசிமின் சகோதரரை சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன், சஹ்ரானின் சகோதரர் ஐ.எஸ் அமைப்பு மீதான ஈர்ப்பை கொண்டிருந்ததை தாம் அவதானித்தாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், எந்தவொரு தாக்குதலுக்காகவும் அவரிடம் உதவிகளை கோரவில்லை என இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
சத்திரகொண்டான் படுகொலை தினம் நேற்று!

சத்திரகொண்டான் படுகொலை தினம் நேற்று!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.