இனங்களை ஒருங்கிணைப்பதற்குப் பயன்படவேண்டிய தேசியக் கொடி இனங்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தியதன் தொடக்கமாக அமைந்ததாக தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
தணியும் இந்த சுதந்திர தாகம் என்ற கருப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியப் பேரவையின் கருத்தமர்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரிவினை வாதத்திற்கு வழிகோலும் வகையில், தேசியக் கொடியில் உள்ள நிறங்கள் மாற்றியமைக்கப்பட்டன.
எனவே, சமத்துவம் தொடர்பில் பேசி வருகின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தேசியக்கொடியில் சம சமத்துவமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே மக்களுக்கு அதனை மெய்ப்பிக்க முடியும் என்றும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.








