Japan Karate Do Shotokan Study Association-இன் 2026 ஆண்டுக்கான தரப்படுத்துதல் பரீட்சை (Belt Grading Exam) கிரான் மத்திய கல்லூரியில் வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த பரீட்சை, தலைமை போதனா ஆசிரியர் Sihan H. M. Vijaya Kumara தலைமையில் நடந்தது.
பரீட்சையில் Sensei M. Nagarajah, Sensei T. Sathanantha Kumar, Sensei A. R. Nawas மற்றும் Sensei S. Sahayarajah ஆகியோர் பயிற்றுவிப்பாளர்களாக பங்கேற்று, மாணவர்களை வழிநடத்தியனர். வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த Sensei T. Sathanantha Kumar (Rankan Master) அவர்களது மாணவர்கள் U. Kesopan மற்றும் S. Noel Rithushan ஆகியோர் Black Belt (1st Dan) தரப்படுத்துதலில் சிறப்பாக தேர்ச்சி பெற்றனர். Black Belt அணிவிக்கும் கௌரவ விழா Japan Karate Do Shotokan Association-இன் தெற்காசியாவுக்கான தலைமை போதனா ஆசிரியரும் பரீட்சகருமான Sihan H. M. Vijaya Kumara அவர்களால் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டது.



Sensei T. Sathanantha Kumar அவர்களுக்கு கடந்த 9 வருடங்களாக தொடர்ச்சியாக மாணவர்களை பயிற்றுவித்து வருவதற்கான நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன. இவர்களின் கடுமையான பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மாணவர்களின் சிறந்த செயல்திறனை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது. இச்சாதனை மாணவர்களுக்கும், பாடசாலைக்கும் பெருமை சேர்த்தது. Japan Karate Do Shotokan Study Association, வாழைச்சேனை பிரதேசம் மற்றும் முழு Karate சமூகமும் எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த சாதனைகளை படைக்க உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்.








