Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிள்ளையான் பற்றி அம்பலமான மற்றுமொரு விடயம்; பெருமளவிலான ஆயுதங்கள் மட்டக்களப்பில் மறைத்து வைப்பு!

பிள்ளையான் பற்றி அம்பலமான மற்றுமொரு விடயம்; பெருமளவிலான ஆயுதங்கள் மட்டக்களப்பில் மறைத்து வைப்பு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

டி.எம்.வி.பி. என்று அழைக்கப்படுகின்ற ‘பிள்ளையான் ஆயுதக் குழு’ பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் குழுவின் பேச்சாளரும், நெருங்கிய சகாவுமான அசாத் மௌலானா CHANEL 4 சர்வதேச ஊடகத்திற்கு பிள்ளையான் பற்றிய பல இரகசியங்களை வழங்கியுள்ள நிலையில், பிள்ளையானின் மற்றொரு முக்கிய சகாவும், ரீ.எம்.வீ.பி. என்ற பிள்ளையான் குழுவின் முக்கியஸ்தருமான மற்றொரு உறுப்பினர் ஆயுதப் புதைப்பு தொடர்பான இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள ஒரு தென்னந்தோப்பு, களுவாஞ்சிகுடி கடற்கரையில் உள்ள மதுபானச்சாலை வளாகம், நாவலடியிலுள்ள கறுவாத் தோட்டம் போன்றனவற்றில் பெருமளவிலான ஆயுதங்களை பிள்ளையான் குழு புதைத்து வைத்ததாக அவர் சாட்சி பகர்கின்றார்.

2009.03.07 அன்று ரீ.எம்.வி.பி. என்ற ‘பிள்ளையான் ஆயுதக் குழு’ தங்கள் வசமிருந்த ஏராளமான ஆயுதங்களை இலங்கை இராணுவத்தினரிடம் பகிரங்கமாகக் கையளித்திருந்தது.

ஆயுதக் கையளிப்பு

மட்டக்களப்பு வெபர் அரங்கில் இடம்பெற்ற அந்த ஆயுதக் கையளிப்பு நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட இயந்திரத் துப்பாக்கிகள், றொக்கட் லோஞ்சர்கள், கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் என்று ஏராளமான ஆயுதங்களை அவர்கள் கையளித்திருந்தார்கள்.

பிரிகேடியர் பர்ணாண்டோ மற்றும் டி.ஜ.ஜி எடிஷன் குணதிலக்காவிடம் ஆயுதங்கள் கையளிக்கப் பட்டன.

தமது உறுப்பினர்கள் அரசியல் நீரோட்டத்தில் கலக்க இருப்பதாகவும், பலர் வெளிநாடுசென்று பணிபுரிய உள்ளதாகவும் அந்த அமைப்பின் பேச்சாளர் அசாத் மௌலானா அறிவித்திருந்தார்.

ஆனால், சிறிலங்கா அரசபடைகளிடம் ஒப்படைக்காமல் ஏராளமான ஆயுதங்களை பிள்ளையான் குழு இரகசியமாகப் புதைத்துவைத்துள்ளதாக, அந்த அமைப்பில் நீண்டகாலம் செயற்பட்ட அந்த முக்கியஸ்தர் எமது செய்தியாளரிடம் தெரிவித்திருந்தார்.

“..2009ம் ஆண்டு காலப்பகுதிகளில் பெரும் தொகையிலான ஆயுதங்களை நாங்கள்; ‘D’ செய்தோம். கல்குடா பேத்தாளை எல்லையிலுள்ள தென்னந்தோப்பிலும், களுவாஞ்சிக்குடி கடற்கரை ஓரமாக உள்ள தென்னந் தோப்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மதுபானக் கடையை அண்டிய தோப்பிலும், நாவலடியில் பிள்ளையான் குழு உறுப்பினர் ஒருவரால் நிர்வகிக்கப்பட்டு வருகின்ற கறுவாத்தோட்டத்திலும் ஏராளமான ஆயுதங்கள் ‘D’ செய்யப்பட்டதை நான் நேரில் பார்த்தேன். நானும் அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டிருந்தேன்..’ என்று அவர் தெரிவித்திருந்தார்.

‘D’ செய்வது என்றால் ‘Dump’ செய்வது என்று பொருள். அதாவது புதைத்து வைப்பது.

புதைக்கப்பட்ட இடங்கள்

அதேபோன்று திருக்கோவிலில் பிரதேசத்தில் சீலன் என்பவருடைய காணியிலும், ருத்திரா மாஸ்டர் என்பவருடைய வயலிலும், ஜெயந்தன் என்ற உறுப்பினருடைய தோட்டத்திலும் ஒரு தொகுதி ஆயுதங்கள் புதைக்கப்பட்டதாக தான் கேள்விப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நபர்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக வைத்திய அத்தாட்சிப்பத்திரம் பெற்று, அவர்களை சட்டம் அணுகமுடியாதவாறு பாதுகாப்பு வலைப்பின்னலை உருவாக்கிவிட்டு, அவர்களது பாதுகாப்பில் ஆயுதங்கள் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக அந்த உறுப்பினர் தெரிவித்தார்.

அத்தோடு பிள்ளையான் குழு மேற்கொண்ட பல்வேறு படுகொலைகள், ஆட்கடத்தல்கள் போன்றன பற்றிய விபரங்களையும் எமது ஊடகவியலாளரிடம் பகிர்ந்துள்ளார்.

பிள்ளையான் குழு மேற்கொண்ட கொலைகளுக்கு கட்டளையிட்ட, அவர்களைப் பாதுகாத்த சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சிலரது பெயர்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது
செய்திகள்

கட்டுநாயக்கவில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் இளைஞன் கைது

June 9, 2025
பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்
செய்திகள்

பொசன் தானங்களில் தொற்று நோயாளர்கள் கலந்துகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தல்

June 9, 2025
பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்
செய்திகள்

பொசன் வார யாத்திரீகர்களுக்கு அவசர தொடர்பு எண் அறிமுகம்

June 9, 2025
கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு
செய்திகள்

கிழக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தை முன்னெடுப்பதற்காக எட்டு கோடி நிதி ஒதுக்கீடு

June 9, 2025
323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்
செய்திகள்

323 கொள்கலன் விவகாரத்தில் சிக்கியுள்ள அதிகாரிகள் நாட்டை விட்டு தப்பியோட திட்டம்

June 9, 2025
கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்
செய்திகள்

கதிர்காம காட்டுப்பாதை 20ஆம் திகதி திறக்கப்பட்டு 04ம் திகதி மூடப்படும்-அடையாள அட்டையும் அவசியம்; அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்

June 9, 2025
Next Post
மட்டக்களப்பில் தொடரும் பண மோசடி;  தொடர்புடையவர்கள் கைது!

மட்டக்களப்பில் தொடரும் பண மோசடி; தொடர்புடையவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.