கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உந்துருளியில் வந்த சந்தேகநபர்கள் டி56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தி தப்பிச்சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தாக்குதலுக்கான காரணம் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை.








