இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் நெடுந்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை, பொலிசாரை கண்டதும் குறித்த உரிமையாளர்களால் புறாக்களை தீயிட்டு எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சுமார் இரண்டு தினங்களுக்கு முன்னர் சுமார் 144 புறாக்கள் இந்தியாவிலிருந்து நெடுந்தீவுக்கு கடத்திவரப்பட்டுள்ளன.இந்தநிலையில் பகுதி பகுதியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வர திட்டமிட்டு, முதற்கட்டமாக 44 புறாக்களை குறிக்கட்டுவான் பகுதிக்கு எடுத்துச் சென்றபோது கடற்படையினர் வழிமறித்து மூவரை கைது செய்ததுடன், சந்தேகநபர்களை ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதன் போது இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் மீதமுமாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட புறாக்கள் நெடுந்திவில் மறைத்து வைக்கப்பட்டிருப்பது உறுதியானது. இவ்வாறு பொலிசார் நெடுந்தீவுக்கு வருவதை அறிந்து கொண்ட உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கைக்கு பயந்து குறித்த புறாக்களான ஆதாரங்களுக்கு கூண்டோடு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவ இடத்தை சுற்றி வளைத்த பொலிசார், புறாக்கள் தீயில் கருகி உயிரிழந்திருந்ததையும் மீதமுள்ள புறாக்கள் காயங்களுடன் தப்பி துடிதுடித்துக் கொண்டிருந்ததையும் கண்டனர். இவ்வாற சூழ்நிலையில் மீதமுள்ள புறாக்களை காப்பாற்று நோக்கில் அடைத்து வைத்திருந்த கூண்டை திறந்து சில புறாக்களை பறக்க வைத்ததுடன், தம்பியோடிய வீட்டு உரிமையாளர்களையும் பொலிசார் தேடி வருகின்றனர்.








