Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்!; ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்!; ஆறாம் ஆண்டு நிறைவுக்கு முன் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்ட அரசாங்கம் முயற்சி

5 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்கு முன்னர் எவரையாவது ஒருவரை குற்றவாளியாகக் காட்டி வழக்கை தீர்க்க அரசாங்கம் முயற்சிப்பதாக மக்கள் போராட்ட முன்னணியின் உறுப்பினர் சட்டத்தரணி நுவன் போபகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில், 16ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்சவைப் போன்று தற்போதைய அரசாங்கமும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியல் ரீதியாக விற்பனை செய்து ஆட்சிக்கு வந்தார்கள். இவர்கள் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளையும், சூத்திரதாரிகளையும் வெளிப்படுத்துவோம் என்று வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தனர். ஆனால் இன்று வரை அது பற்றிய எந்தவொரு அறிக்கையும் வெளிவிடவில்லை.

ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசேட அறிக்கை கடந்த கால அரசாங்கங்களை போல் தற்பொதைய அரசாங்கமும் சரியான முறையில் வெளிவிடுவதில்லை. இந்த அறிக்கை வெளியிடபடாமைக்கு இந்தியாவின் அழுத்தம் காரணமா அல்லது நாட்டின் உயர்மட்ட பொலிஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் செல்வாக்கு காரணமா என்று தெரியவில்லை. இந்த விடயத்தில் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் கத்தோலிக்க மக்கள் பல வருடங்களாக இதற்கு ஓர் முறையான தீர்வு வேண்டும் என்று போராடினார்கள்.

ஆனால் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னர் இந்த விடயத்தில் ஒரு தீர்ப்பை பெறுவதற்காக அரசாங்கம் அவசரமாக செயற்பட்டு வருகிறது. அதற்காக சட்ட ரீதியாக சில கட்டுப்பாடுகளை விதித்து எப்படியாவது ஒருவரை குற்றவாளியாக்க முயற்சிக்கிறது. ஆறு வருடங்களாக காத்திருந்தமைக்கு இப்படி யாராவது ஒருவரை குற்றவாளியாக்க முயற்சிப்பது முறையான தீர்வாகுமா? இவ்வாறு நீண்ட காலமாக போராடி வரும் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மற்றும் கத்தோலிக்க மக்களும் உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று தான் எதிர்ப்பார்க்கின்றார்கள் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!
செய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இளைஞர் ஒருவர் உயிரை மாய்க்க முயற்சி!

July 7, 2026
பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!
செய்திகள்

பாதயாத்திரை குழுவிலிருந்து பிரிக்கப்பட்ட ‘சுப்பிரமணியம்’ நாய் உரிமையாளருடன் கதிர்காமம் சென்றது!

July 7, 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது!

July 7, 2026
வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!
செய்திகள்

வாழைச்சேனை தாமரைக்குளத்தில் வலை எடுக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் மீட்பு!

July 7, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற ஐம்பொன் சிலைகள் மீட்பு

July 7, 2026
கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

கிண்ணியாவில் மயானப் பிரச்சினைக்கு தீர்வு கோரி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

July 7, 2026
Next Post
பொத்துவிலில் தனியார் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

பொத்துவிலில் தனியார் கல்வி நடவடிக்கைகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.