Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

ஹக்கீம் தோல்வி அடையக் கூடாது என்பதற்காக மக்கள் காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தவில்லை; நிந்தவூர் பிரதேச சபை விடயத்தில் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது-ரிஷாத் பதியுதீன்

5 months ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன், கண்டி மாவட்டத்தில் ரவூப் ஹக்கீம் தோல்வியடையக் கூடாது என்பதற்காக, கடந்த தேர்தலில் மக்கள் காங்கிரஸ் சார்பில் எந்த வேட்பாளரையும் நிறுத்தாமல், சமூக நலனை முன்னிறுத்தி நல்ல முடிவை எடுத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆனால், அதே வேளையில் நிந்தவூர் பிரதேச சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆட்சி செய்யக் கூடாது என்ற நோக்கில், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று செயல்பட்டு வருவது, நிந்தவூர் மக்களுக்கும் அந்த ஊரின் எதிர்கால அபிவிருத்திக்கும், மக்களின் விருப்பத்திற்கும் எதிரான செயலாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிரின் மேற்பார்வையிலும், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் எஸ்.எம். சபீஸின் ஏற்பாட்டிலும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று இடம்பெற்றது. இதன் போது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

மேலும் உரையாற்றிய ரிஷாத் பதியுதீன், அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தி, தற்போதைய அரசியல் நிலவரம், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் கட்சியினுள் ஒற்றுமையின் அவசியம் குறித்து விரிவாக விளகயிருந்தார்.

குறிப்பாக, யாராக இருந்தாலும், கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக செயல்படும் நபர்களுக்கு எதிராக உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

மேலும், ஒரு அரசியல் கட்சியும் அதன் தலைவரும் சமூகத்தை முன்னிறுத்தி, மக்களின் நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்றும், இன்றைய சூழலில் சிறுபான்மை சமூகத்தை சரியான திசையில் வழிநடத்திச் செல்லும் அரசியல் கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், கட்சியின் தேசிய கொள்கை பரப்பு செயலாளரும், உயர்பீட உறுப்பினரும், அம்பாறை மாவட்ட செயற்குழு தலைவருமான அப்துல் ரசாக் ஜவாத், தனது மாவட்ட தலைவர் பதவியிலிருந்து தானாகவே விலகுவதாக தலைவர் முன்னிலையில் அறிவித்தார்.

எதிர்காலத்தில் கட்சிக்காக 100 சதவீதம் தனது பங்களிப்பு இருக்கும் என்றும், கட்சியின் நலனும், குறைகளும் குறித்து வெளிப்படையாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி
செய்திகள்

நீதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

July 24, 2026
கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்
செய்திகள்

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபை பணிப்பாளர் சபை உறுப்பினராக வாழைச்சேனையைச் சேர்ந்த சந்திரா டிசோ நியமனம்

July 24, 2026
நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு
செய்திகள்

நிதி மோசடி குற்றச்சாட்டு; இலங்கை மத்திய வங்கி மீது குற்றச்சாட்டு

July 24, 2026
இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!
செய்திகள்

இரத்தக்கறைகளுடன் வீடொன்றில் முதியவரின் சடலம்; பொலிஸார் விசாரணை!

July 24, 2026
செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது
செய்திகள்

செம்மணி என்புக்கூடுகளை பார்க்கும்போது குற்றம் நடந்து அவசரமாக புதைக்கப்பட்டது போல் தெரிகிறது

July 24, 2026
கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!
செய்திகள்

கோட்டாபயவுக்கு எதிராக புதிய விசாரணை திருப்பம்; உறவினர் CID முன் வாக்குமூலம்!

July 24, 2026
Next Post
வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிக நீக்கம்

வியாழேந்திரனின் வெளிநாட்டு பயணத் தடை தற்காலிக நீக்கம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.