இந்திய தெலுங்கானா அரசு, தெலுங்கானா டாக்டர் எம்.சி.ஆர் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் சட்டம் மற்றும் பொது நிர்வாக மையம் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடக வல்லுநர்களுக்கான ஊடக மேலாண்மை குறித்த ஒரு வார கால சிறப்புப் பயிற்சித் திட்டத்தில் 30 ஊடகவியலாளர்கள் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹதராபாத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்
இதன் போது பயிற்சிநெறியில் பொலிசாரின் பாதுகாப்புடன் தெலுங்கானா மாநிலத்தின் தலைநகர் ஹதராபாத்தில் இருந்து 200 கிலோ மீற்றர் தூரம் பஸ்வண்டியில் பிரயாணித்து ஆந்திரா மாநிலத்தில் கிருஸ்ணாகிரி நதியில் ஒரு மணித்தியாலம் கப்பலில் பயணித்து
நாகார்ஜுனகொண்டா தீவுக்கு சென்றனர்.














அதேசமயம் இதில் மட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டதுடன், இது கி.பி. 2 மற்றும் 3-ஆம் நூற்றாண்டுகளில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பௌத்த கல்வி மையமாக இத்தீவு விளங்கியது.
இந்த தீவில் “சிங்கள விகாரை” (Sinhala Vihara) என்ற பெயரில் இலங்கை பௌத்த பிக்குகள் தங்கியிருந்த இடத்தின் இடிபாடுகள் இன்றும் உள்ளதுடன், புத்தர் பிறந்த இடம் நேபாளத்தில் உள்ள லும்பினி (Lumbini) என்று வரலாறுகள் தெரிவித்தாலும், இன்னொருபக்கத்தில் இந்த நாகார்ஜுனகொண்டா தீவில் தான் புத்தர் பிறந்தாகவும் சில சில நூல்கள் கூறுகின்றன.








