Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

மகளிர் மற்றும் சிறுவர் திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தலைமையில் மீளாய்வு!

7 hours ago
in செய்திகள்

மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் 2026ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (20.07.2026) நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

இதன்போது, இலங்கை மகளிர் பணியகம், பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழு, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான தேசிய செயலகம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் திட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உணவுப் பொதித் திட்டம், முன்பள்ளி சிறுவர்களுக்கான காலை உணவு வழங்கும் திட்டம், முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ‘குரு அபிமானி’ கொடுப்பனவு, தெருவோர சிறுவர்களுக்கான வாழ்வாதார உதவி மற்றும் சிறுவர் பராமரிப்பு திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தினார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போஷாக்கு உதவித் திட்டம் வெறுமனே நிதி உதவியாக அல்லாமல், அவர்களின் போஷாக்கு நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் முறையாக கண்காணிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், ‘டித்வா’ சூறாவளியினால் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கான மாதாந்த உதவிக் கொடுப்பனவு வழங்கும் திட்டத்தின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், உரிய பயனாளிகளுக்கு உதவிகள் தாமதமின்றி கிடைப்பதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி வலியுறுத்தினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு
செய்திகள்

பெசிலுக்கு பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீண்டும் நீடிப்பு

July 21, 2026
“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்
அரசியல்

“வெளியே போடா நாயே” என்ற சந்திரசேகர்;அர்ச்சுனாவுக்கு ஆதரவாக சாணக்கியன் குரல்

July 21, 2026
டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
செய்திகள்

டெங்கு இரத்தக்கசிவால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!

July 21, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!
செய்திகள்

ஹோமாகம தொழிற்சாலை தீ விபத்தில் 5 பேர் பலி!

July 21, 2026
Next Post
கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

கடற்படை நடவடிக்கையில் 1,000 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.