Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

செங்கலடியில் விழும் நிலையில் மின்கம்பம்; பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் பெரும் அச்சம்

3 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஏறாவூர் மின்சார சபைக்கு சொந்தமான மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் செங்கலடிச் சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள மின்கம்பம் ஒன்று சரிந்து விழும் நிலையில் காணப்படுவதால் அந்த வீதியைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வாகன சாரதிகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த மின்கம்பமானது வீதிச் சமிஞ்சை விளக்குகளுக்கு (Traffic Lights) அருகாமையில் அமைந்துள்ளது. இது பிரதான வீதியை நோக்கி சாய்ந்த நிலையில் காணப்படுவதால், எந்த நேரத்திலும் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய இரு பிரதான நகரங்களையும் இணைக்கும் போக்குவரத்து நெரிசல் மிக்க இப்பகுதியில் இவ்வாறானதொரு நிலை காணப்படுவது பாரிய அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்கள், அலுவலகங்களுக்குச் செல்வோர் , பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினசரி கடந்து செல்லும் பாதையில் இந்த மின்கம்பம் உள்ளது. இது விழுந்தால் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மின்கம்பம் சரிந்து வீழ்ந்தால் உயர்மின்னழுத்தக் கம்பிகள் அறுந்து விழுந்து மின்சாரத் தாக்கம் ஏற்படும் அபாயமும் இங்கு உள்ளது.

நீண்ட நாட்களாக இந்த மின்கம்பம் சரிந்த நிலையிலேயே காணப்படுவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை அவதானிக்கத் தவறிவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்த மின்கம்பமானது ஏறாவூர் மின்சார சபை பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ளது. சிறிய விபத்துக்கள் வீதி புனரமைப்புப் பணிகள் அல்லது இயற்கை அனர்த்தங்கள் காரணமாக இது சரிந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இருப்பினும், இதுவரை இதற்கான நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை. பாரிய விபத்து ஒன்று நிகழும் முன், குறித்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நடுவதற்கு மின்சார சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!
செய்திகள்

பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு எதிராக புதிய சட்டம்; அரசாங்கம் கவனம்!

June 9, 2026
திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!
செய்திகள்

திறைசேரி டொலர் காணாமல் போன விவகாரம்; மத்திய வங்கிக்கு ஒரு வார அவகாசம்!

June 9, 2026
ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் உண்மை வெளிவராமல் தடுக்க உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, திலித் ஜயவீர முயற்சி

June 9, 2026
தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது
செய்திகள்

தொல்பொருள் மதிப்புள்ள புத்தர் சிலையை திருடிய பிக்கு மற்றும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் கைது

June 9, 2026
மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு
செய்திகள்

மட்டு மாமாங்கம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

June 9, 2026
ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்
செய்திகள்

ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி உயர்தர பரீட்சை ஆரம்பமாகும்

June 8, 2026
Next Post
வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது!

வர்த்தக அமைச்சின் முன்னாள் செயலாளர் உட்பட மூவர் அதிரடி கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.