மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக, ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட பல சர்வதேச விமான நிறுவனங்கள் அந்தப் பிராந்தியத்திற்கான தமது சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
கட்டார், குவைட், ஈரான் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட பதற்றமான பகுதிகளுக்கான விமானப் பயணங்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர், அந்தந்த விமான நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு தமது விமான பயணங்களின் நிலையை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு விமானப் போக்குவரத்து அதிகார சபை கேட்டுக் கொண்டுள்ளது.








