மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள சூழலில், உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு எதிராகப் போரிட ஈரான் தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டால், அவர்களுக்குத் தேவையான அதிநவீன ஏவுகணைகளை வழங்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, இஸ்ரேல் போன்ற ஒரு நாட்டை முழுமையாகத் தரைமட்டமாக்க வடகொரியாவின் ஒரே ஒரு ஏவுகணையே போதுமானது என அவர் விடுத்துள்ள மிரட்டல் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நட்பு நாடான இஸ்ரேலுக்கு எதிராகத் தான் எந்நேரமும் களமிறங்கத் தயார் என்பதை கிம் ஜாங் உன் இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அணு ஆயுத பலத்தால் அமெரிக்காவை அச்சுறுத்தி வரும் வடகொரியா, தற்போது மத்திய கிழக்கு போரிலும் தனது தலையீட்டை உறுதிப்படுத்தியுள்ளமை உலக நாடுகளிடையே பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
அத்தேசமயம் எங்களைத் தாக்கினால் அணு ஆயுத பலத்துடன் பதிலடி கொடுப்போம் என்றும்
மேலும் அமெரிக்கா பகைமை கொள்கையை நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








