தற்போதைய நிலமைகள் குறித்து பாராளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகையினால சாக்கு போக்கு சொல்லாமல் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று நாமல் ராஜபக்ஸ நேற்று சபையில் தெரிவித்தார்.
அதேசமயம் அரசாங்கம் இந்த நிலைமையில் கவனத்தில் கொள்ளாமல் யுத்தத்திற்கு, புலிகளை தோற்கடித்க உதவி செய்தவர்களை சிறையில் தள்ளுவதிலும் அவர்களை அவமானப்படுத்துவதிலும் குறிப்பாக செயற்படுவதாக அவர் மேலும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.








