ஈரானில் மதவாத ஆட்சிக்கு எதிராக ஜனவரி மாதத்தில் நடைபெற்றதாக கூறப்படும் கிளர்ச்சி சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில், இரண்டு காவல்துறை அதிகாரிகளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு நீதிமன்ற விசாரணையின் அடிப்படையில் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளிகள் ஈரான் அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுள்ளன. அதில் நீதிமன்ற விசாரணை காட்சிகளும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் சீருடையில் அமர்ந்திருக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.








