உலகப் பயங்கரவாதக் குறியீடு பட்டியலை வெளியிட்டு வரும் சர்வதேச பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனமானது, 2026ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பயங்கரவாதக் குறியீடு பட்டியலை நேற்று (22) வெளியிட்டுள்ளது.
இதில் 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடம் பிடித்துள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டில் பயங்கரவாதத்தால் பாகிஸ்தானில் சுமார் 1,139 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.








