உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அராம்கோ நிறுவனம் தொடர்ந்து 2வது மாதமாக
ஆசிய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகத்தைக் குறைத்துள்ளது.
அமெரிக்கா – இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் காரணமாக ஹார்மூஸ் நீரிணையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு 7.1 மில்லியன் பேரல்களாக இருந்த கச்சா எண்ணெய் ஏற்றுமதி, மார்ச் மாதத்தில் 4.35 மில்லியன் பேரல்களாகக் குறைந்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை பாதிப்பை ஈடுகட்ட, சவுதி அரேபியா செங்கடல் பகுதியில் உள்ள தனது யான்பு துறைமுகத்தின் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க முயல்கிறது.
கடந்த வியாழக்கிழமை யான்புவில் உள்ள அராம்கோவின் SAMREF சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு ட்ரோன் விழுந்து விபத்துக்குள்ளானதால், அங்கு எண்ணெய் ஏற்றுமதி தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது.
தற்போது சவுதி அராம்கோ ‘அரப் லைட்’ ((Arab Light)) ரக எண்ணெயை மட்டுமே விநியோகிப்பதால், ஆசிய சுத்திகரிப்பு நிலையங்களுக்குக் கிடைக்கும் கச்சா எண்ணெய் அளவு குறைந்து அவற்றின் உற்பத்தித் திறன்
பாதிக்கப்பட்டுள்ளது.








