எதிர்வரும் நாட்களில் முறையாக எரிவாயு விநியோகத்தை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமையல் எரிவாயுவுக்கான விநியோகத்திலிருந்த சிக்கல்களுக்கு தீர்வுக் காணப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதப் பயன்பாடுக்காக 38,000 மெற்றிக் தொன் எரிவாயு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் நாளாந்த பயன்பாட்டுக்குத் தேவையான எரிவாயு தென்னாபிரிக்க வலயத்திலிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
2018 ஆம் ஆண்டிலிருந்து 2025 ஆம் ஆண்டுவரை வளைகுடாவினூடான ஓமான் நிறுவனமொன்றினால் எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்காக எரிவாயு விநியோகம் சுவிஸர்லாந்து நிறுவனமான ஜியோ கேஸ் ட்ரேடிங் நிறுவனத்தினூடாக விநியோகிக்கப்படுகிறது.
அவர்கள் எமக்கு பெற்றுக்கொடுக்கும் 80 சதவீதமான எரிவாயு தென் அமெரிக்காவிலிருந்து பெற்றுக்கொண்டு ஆபிரிக்க வலயத்தினூடாக மாலைத்தீவுக்கு கொண்டுவரப்படுகிறது.
பெரும் எண்ணிக்கையிலான கப்பல்களை கொண்டுவந்து மாலைத்தீவில் நங்குரமிட்டு வைத்துள்ளார்கள்.
லிட்ரோ நிறுவனத்தின் களஞ்சியத்தின் கொள்ளளவு 8,000 மெற்றிக் தொன்னாகும்.
ஆனால் எமது மாதாந்த பயன்பாட்டுக்கு 30,000 – 33,000 தொன் எரிவாயு தேவைப்படுகிறது.
ஒரு நேரத்தில் அந்த எரிபொருள் தொகையை இறக்குமதி செய்யமுடியாது.
எனவே, களஞ்சியப்படுத்தக் கூடிய அளவுக்கு மாத்திரமே நாட்டுக்கு கொண்டு வருகிறோம்.
அதற்கமைய, சாதாரணமாக 5 நாட்களுக்கு தேவையான எரிவாயு மாத்திரமே லிட்ரோ எரிவாயு களஞ்சியப்படுத்தப்படுகிது.
லாப்ஃ எரிவாயு நிறுவனம் எதிர்வரும் 30,31 ஆம் திகதிகளில் 8000 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. ஏ
பரல் மாதம் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் மேலும் 21 மெற்றிக் தொன் எரிவாயுவை விநியோகிக்கவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.








