பிரதேசசபை செயலாளரின் மனிதநேயக் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய விடயமாக, 2025 ஆம் ஆண்டு 07, 08 மற்றும் 09 மாதங்களுக்கான தனது ஊதியம் வழங்கப்படாதது மனித உரிமை மீறலாகும் என சுகாதாரத் தொழிலாளி ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த நிலைமையால் தாம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், பொத்துவிலில் இருந்து கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் வரை கவனயீர்ப்பு நடைபவணி ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
மேலும், கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று, தமக்கு ஏற்பட்ட அநீதியைப் பற்றிய கலந்துரையாடலை நடத்தவும் பாதிக்கப்பட்ட சுகாதார ஊழியர் எச்.ஏ. நிபான் இதனைத் தெரிவித்துள்ளார்.
நிபான் அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்குமா என்பது குறித்து அவருடைய குடும்பம் கவனத்துடன் எதிர்பார்த்து வருகின்றனர்.








