குவைத்தில் உள்ள மக்கள் நள்ளிரவு 12:00 மணி முதல் நாளை காலை 06:00 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குடிமக்களும் குடியிருப்பாளர்களும் வீட்டிலேயே இருக்குமாறும், மிகவும் அவசியமானால் மட்டுமே வெளியே செல்லுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என, X தளத்தில் பகிரப்பட்ட ஓர் அறிக்கையில் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை பாதுகாப்பைப் பேணுவதையும், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதையும், நிலைத்தன்மையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அது கூறுகிறது.
ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில், செவ்வாய்க்கிழமை, இரவு 8:00 மணி கிழக்கு நேரம்! (புதன்கிழமை காலை 5:30 மணி) என்ற ஒற்றை வரியைப் பதிவிட்டதிலிருந்து நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது.
எனவே பலரும் அடுத்து என்ன நடக்கும் என்று பெரும் பதற்றத்தில் உள்ளனர்.









