ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்படும் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையில் 10 நாள்களுக்குப் போர்நிறுத்தம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக அனைத்து நாடுகளின் வர்த்தக கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அரசு கடந்த நேற்று (17) அறிவித்திருந்தது.
இதனை வரவேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் உடன் விரைவில் போர்நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனவும், சேகரித்துள்ள யுரேனியம் செறிவூட்டல்களை ஒப்படைக்க ஈரான் முன்வந்துள்ளதாகவும் கூறினார். ஆனால், யுரேனியம் செறிவூட்டல்கள் ஒப்படைக்கப்படாது என ஈரான் அரசு மறுத்துள்ளது.
இந்த நிலையில், ஈரானிய துறைமுகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை மீண்டும் முடக்கப்படும் என ஈரான் அரசு இன்று (18) எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து, ஈரானிய நாடாளுமன்ற அவைத் தலைவர் முகமது பாகெர் காலிபாஃப் கூறுகையில், அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை தொடர்ந்து திறக்கப்படாது எனக் கூறியுள்ளார்.
“ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படுவதும் மூடக்கப்படுவதும் இணையத்தளம் வழியாக நடைபெறும் செயல் அல்ல, அவை களத்தில் முடிவு செய்யப்படுபவை.
எதிரிகளின் நடவடிக்கைகளுக்கு ஏற்றவாறு எப்படி பதிலளிக்க வேண்டும் என எங்களின் ஆயுதப்படைகளுக்குத் தெரியும்” என ஈரானிய வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார்.








