Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி சூடு; இலங்கை இளைஞன் உயிரிழப்பு

கனடாவில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி சூடு; இலங்கை இளைஞன் உயிரிழப்பு

4 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்திலுள்ள ஏஜாக்ஸ் (Ajax) நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் அவரது இல்லத்திலேயே வைத்து மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா என அந்நாட்டுப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:40 மணியளவில், ஏஜாக்ஸ் நகரின் Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் இளைஞர் ஒருவர் மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனர். அவருக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி நிக்கோலஸ் கிளக்ஸ்டைன், “இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; குறிப்பிட்ட அந்த நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல்” எனத் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, அங்கிருந்து இருவர் தப்பியோடியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்களது அடையாளங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.