Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி சூடு; இலங்கை இளைஞன் உயிரிழப்பு

கனடாவில் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கி சூடு; இலங்கை இளைஞன் உயிரிழப்பு

5 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

கனடாவின் டர்ஹாம் பிராந்தியத்திலுள்ள ஏஜாக்ஸ் (Ajax) நகரில், இலங்கை இளைஞன் ஒருவர் அவரது இல்லத்திலேயே வைத்து மர்ம நபர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர் சஞ்சுல பெரேரா என அந்நாட்டுப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12:40 மணியளவில், ஏஜாக்ஸ் நகரின் Taunton மற்றும் Westney வீதிகளுக்கு அருகிலுள்ள வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வீட்டிற்குள் இளைஞர் ஒருவர் மிகக் கடுமையான காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைக் கண்டனர். அவருக்குத் தீவிர மருத்துவச் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸ் அதிகாரி நிக்கோலஸ் கிளக்ஸ்டைன், “இது ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல; குறிப்பிட்ட அந்த நபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஒரு திட்டமிட்ட தாக்குதல்” எனத் தெரிவித்தார்.

தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம் எது என்பது குறித்த விபரங்களை பொலிஸார் இதுவரை பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடவில்லை.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னதாகவே, அங்கிருந்து இருவர் தப்பியோடியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்களது அடையாளங்கள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!
செய்திகள்

சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய குடிவரவு திணைக்கள உதவி கட்டுப்பாட்டாளர் கைது!

September 18, 2026
இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!
செய்திகள்

இலங்கையின் முதலாவது மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு இன்று திறப்பு!

September 18, 2026
கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

கல்முனையில் காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்; உணவக உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

September 18, 2026
“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”
அரசியல்

“அர்ச்சுனாவை கைது செய்து சிறையில் அடைக்குமாறு அனுரவை கெஞ்சும் சுமந்திரன், சாணக்கியன்!”

September 18, 2026
இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!
செய்திகள்

இலங்கை ரயில்வேயின் புதிய டிஜிட்டல் ஆசன முன்பதிவு தளம் ‘Pravesha’ அறிமுகம்!

September 18, 2026
நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!
செய்திகள்

நாமல் ராஜபக்ஷ மீண்டும் நீதிமன்றில் ஆஜர்!

September 18, 2026
Next Post
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் கணக்காளர் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.