குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ 401 கிராம் எடைகொண்ட குஷ் போதைப்பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பெங்கொக் நகரில் கொள்வனவு செய்து, இந்தியாவின் பெங்களூர் நகருக்குக் கொண்டு சென்று அங்கிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்துள்ளனர்.
கைதானவர்கள் இந்தோனேஷியாவைச் சேர்ந்த 22 வயது இளைஞர் மற்றும் 30 வயது யுவதி எனத் தெரிய வந்துள்ளது.
மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 6 கோடியே 40 இலட்சத்து 10 ஆயிரம் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.








