Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வு

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மே தின நிகழ்வு

1 month ago
in அரசியல், காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

தேசிய மக்கள் சக்தி கிழக்கு வடக்கு தெற்கு என மட்டும் அல்லாமல் நாட்டின் எல்லா பகுதிகளிலும் இன்று இந்த மே தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம். மட்டக்களப்பில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் பறங்கியர் என எல்லா மக்களும் மட்டக்களப்பு வரலாற்றில் முதல் முதலாக நகரில் இம் மே தினத்தை கொண்டாடிவருகின்றோம். அதனால் இது ஒரு முக்கியமான ஒரு நாளாகும் என தேசிய மக்கள் சக்தி அமைச்சர் சுனிர் ஹந்திநெத்தி தெரிவித்தார்

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தியின் மேதினம் இன்று வெள்ளிக்கிழமை (01) கல்லடி பாலத்தில் இருந்து காந்திபூங்காவரை ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு இனவாதத்தையும் மதவாதத்தையும் தோற்கடிப்பேம் என கோஷங்கள் எழுப்பி னர் இதில் கலந்துகொண்ட அமைச்சர் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

இது ஒரு மேதினம் மட்டும் அல்ல மதவாதத்துக்கும் இனவாதத்துக்கும் எதிராக போராடுகின்ற நாளாகும். இந்த மாவட்டத்தில் மேடையில் நிற்கின்ற நாங்கள் மட்டுமல்ல தமிழ், சிங்கள, முஸ்லீம் என்று இல்லாது ஒன்றாக பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

2024 ம் ஆண்டு இந்த நாட்டை பெறுப்பேற்ற போது இந்த நாடு எங்கே இருந்தது ? கடனில் இருந்தது அந்த கடனை செலுத்த முடியாது. இருந்தோம் மக்கள் வீதியில் வரிசையில் காத்திருந்தனர். விவசாயிகளுக்கு பசளையின்றி இருந்தனர் நெல்லுக்கு விலை இருக்கவில்லை. அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் அதிகரிக்க வில்லை, மலைநாட்டு தொழிலாளர்களுக்கு சரியான சம்பளம் இல்லை.

இவ்வாறு ஒரு அரசாங்கம் எங்கள் கையில் கிடைக்கவில்லை மிகவும் பிரச்சனையான நாடு தான் கிடைத்தது இப்போது எதிர்கட்சியில் இருப்பவர்கள் அன்று மக்களுக்கு என்ன கூறினார்கள். எங்களுக்கு ஆட்சியை கொடுக்க வேண்டாம் என்றனர். என்ன காரணம், தேசிய மக்கள் சக்திக்கு இந்த அரசாங்கத்தை வழங்கினால் அனுரகுமார திசாநாயக்கவுக்கு இந்த நாட்டை வழங்கினால் 6 மாதத்தில் இந்த நாடு வீழ்சியடையும் எல்லோரும் பட்டினியாக இருக்க வேண்டிவரும் என்றனர். எனவே இதனை முதல் முதலாக மாற்றி அமைக்க வேண்டும் என முயற்சித்தவர்கள் யார்?

இந்த நாட்டு மக்கள் அதனை முடிவெடுத்தனர் கடந்த 76 ஆண்டுகளாக இந்த நாட்டில் ஒரு சட்டம் இருக்கவில்லை ஆட்சி செய்தவர்கள் கள்வர்கள் அவர்கள் மக்களை ஏமாற்றி வந்தனர் எல்லா இடங்களிலும் பிரச்சனைகள் தான் இருந்தன இத்துடன் சாதாரண மக்களுக்கு ஆயுதங்களை கொண்டு அடக்குகின்ற ஒரு ஆட்சி தான் இருந்தது.

கடந்த காலத்தில் மட்டக்களப்பில் இரண்டு சட்டம் இருந்தது. அரசின் சாதாரண சட்டம் இருந்ததா ? இல்லை யுத்தத்தின் பின்னர் பிள்ளையானின் சட்டம் விவசாயிகளிடம் கப்பம் வாங்கினர், விவசாய நிலங்களை அபகரித்தனர் மக்களின் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தை கைப்பற்றி அவர்களது படகுகளை நிறுத்தினர். விவசாயிகள் இங்கு விவசாயம் செய்ய வேண்டும் என முடிவெடுத்தது அவர்கள் தான் அதுமட்டுமல்ல நாங்கள் வாழவேண்டுமா? இல்லையா என முடிவெடுத்ததும் அவர்கள்தான்.

இப்போது இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றதா? இப்போது யாராவது செய்யுங்கள் என பயமுறுத்துகின்றனரா? கடந்த காலத்தில் அதிகாரம் அரசாங்க அதிபர் காரியலயத்தில் மட்டுமல்ல பிரதான பாதைகளிலும் அவர்களது ஆட்சிதான் இருந்தது. ஆனால் இன்று வடக்கு கிழக்கு தெற்கு என நாட்டில் ஒரு நீதிதான் இருக்கின்றது என்பதை நிலைநாட்டியிருக்கின்றோம்.

எங்களுக்கு இந்த நாட்டை கட்டியெழுப்ப தெரியாது என்றனர் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப தெரியாது என்றனர் பல கதைகளை சொன்னார்கள் ஆனால் நாங்கள் இன்று கடன்களை மீள் செலுத்தி வருகின்றோம் என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
செய்திகள்

சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்

June 6, 2026
நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!
செய்திகள்

நீர்கொழும்பில் 477 கிலோ பீடி இலைகளுடன் இருவர் கடற்படையால் கைது!

June 6, 2026
டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!
செய்திகள்

டொலர் உயர்வால் பதற்றம் வேண்டாம்; அரசின் முக்கிய விளக்கம்!

June 6, 2026
ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!
செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு தொழில்சார் அங்கீகாரம்; புதிய சட்டமூலம் வெளியீடு!

June 6, 2026
பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு
செய்திகள்

பொத்துவிலில் மோட்டார் சைக்கிள் மோதி 8 வயது சிறுவன் உயிரிழப்பு

June 6, 2026
செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!
செய்திகள்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

June 6, 2026
Next Post
அநுரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை; திலித் ஜயவீர

அநுரவின் நாடக அரசியலுக்கு இனி எதிர்காலம் இல்லை; திலித் ஜயவீர

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.