இலங்ரைக தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் முக்கியஸ்தர்களுக்கும் கனடா மற்றும் பிரித்தானிய உயர்ஸ்தானிகர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (04) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் மார்டின் இசபெல்லா, இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக் ஆகியோரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், ஞா.சிறிநேசன், இ.சிறிநாத், மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் மு.தினேஸ்குமார், முன்னாள் முதல்வர் தி.சரவணபவன், தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் வடகிழக்கு மாகாண தலைவர் கி.சேயோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதன்போது கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை மற்றும் வடகிழக்கில் காணப்படும் அரசியல் சூழ்நிலை குறித்து கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் மாகாணசபை தேர்தல் தொடர்பிலும்,13வது திருத்த சட்டம் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,








