இந்தியாவின் தமிழ்நாடு பாரம்பரிய அரசியல் பேசும் ஒரு மாநிலமாகவே இருந்தாலும் தற்போது இடம்பெற்றுள்ள ஆட்சிமாற்றம் ஒரு பாரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.
கடந்த ஒரு வாரகாலமாக ஆட்சியமைப்பதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து வந்த தமிழக வெற்றிக்கழகம் தற்போது 120 அதீத பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கின்றது.
இதனடிப்படையில், ஜோசப் விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக சற்றுமுன் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னதாக தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தவெக (தனிப்பெரும்பான்மை இன்றி) 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

இதையடுத்து ஆட்சியமைக்க காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியிருந்தது.
முதல் ஆளாக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தது. இதையடுத்து, தவெகவுக்கு இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக வெள்ளிக்கிழமை (மே 8) அறிவித்தது.
அதேசமயம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நேற்று தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாக தெரிவித்தது.
அதன்படி தவெகவுக்கு விசிகவும் நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக நேற்று தெரிவித்தது. அந்த வரிசையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் இறுதி நேரத்தில் இணைந்ததில் 120 என்ற பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பெரும்பான்மை பெற்று மீண்டும் தனது தனிப்பெரும் கட்சி பெரும்பான்மையை விஜய் நிரூபித்தார்.








