நீர்க்கட்டண மீளாய்வு எதிர்வரும் ஜூன் 30ஆம் திகதி மேற்கொள்ளப்படும் என வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் கலாநிதி சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு இருமுறை நீர்க்கட்டணம் திருத்தப்படும் நடைமுறைக்கு ஏற்ப, இம்முறை ஜூன் 30ஆம் திகதியிலுள்ள நிலைமைகள் கருத்தில் கொள்ளப்பட்டு நீர்க்கட்டணம் மீளாய்வு செய்யப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் பொருளாதார சூழ்நிலை மற்றும் செலவுக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு இந்த திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








